Thursday, May 2, 2013

ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

உவரி
இங்கு புகழ் மிக்க சுயம்புலிங்க கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் விசாகத் திருவிழா புகழ் பெற்றது.

பரதர் உவரி


உவரி அந்தோனியார் திருத்தலம் மற்றும் செல்வமாதா திருத்தலம் ஆகியவை புகழ்பெற்றவை.




குட்டம் அதிசய தூங்கா புளிய மரம்:-

திருச்செந்தூர்- கன்னியாகுமரி கடற்கரைச் சாலையோரம் அமைந்துள்ள குட்டம் என்ற ஊரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி அம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இது. இந்த தூங்கா புளிய மரத்தின் இலையை பிரசாதமாக உட்கொண்டால் தீராத நோயும் தீருமாம்.

திருச்செந்தூர்

சிவபெருமானுக்கே பிரணவத்தின் பொருளுரைத்த முருகன், இங்கு பக்தர்களைக் காக்கும் பால முருகனாய் எழுந்தருளியுள்ளார். தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்களை ஆட்கொண்டு நல்வழிப்படுத்துவது என்ற உயர்ந்த கருத்தைக் கொண்ட சுப்ரமணிய சுவாமி, சூரபத்மனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இதனால், அன்று முதல், ‘சேவற்கொடியோன்’ என்ற திருப் பெயரும் பெற்றார். ஐப்பசி மாதம் இங்கு நடைபெறும் சூர சம்ஹாரம் பிரபலமானது.

 குலசேகரப்பட்டினம்:-

திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு முத்தாரம்மன் கோயில் கொண்டுள்ளார். இங்கு நடைபெறும் நவராத்திரி தசரா திருவிழா புகழ் பெற்றது.

ஸ்ரீவைகுண்டம்

 திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலமான இங்கு ஸ்ரீவைகுண்டபதி கோவில் கொண்டுள்ளார். வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

மணப்பாடு

 இங்கு ஆதிகால ரோமன் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்தத் தேவாலயத்தில் உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த ஊரை ‘சின்ன ஜெருசலேம்’ என்றும் அழைப்பதுண்டு. திருச்செந்தூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் வங்கக் கடற்கரையோரம் மணப்பாடு அமைந்துள்ளது.

திருநெல் வேலி 

கோவில்களுக்கும் திருநெல்வேலி மாவட்டம் புகழ்பெற்றது. திருநெல் வேலி மாநகரின் இதயப்பகுதியில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. காந்திமதி (பார்வதி) சகிதமாக நெல்லையப்பர் (சிவன்) அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார். பாரம்பரிய மிக்க இந்தக்கோவிலின் தேரோட்ட விழாவில் திருநெல்வேலியே திரண்டு வந்து வடம் பிடிக்கும். இங்குள்ள பொற்றாமரை குளம், இசையெழுப்பும் தூண்கள் போன்றவை மேலும் ஆச்சரியப்படுத்தும்.

பிற தலங்கள்:

இதே போல பொட்டல்புதூரில் 1674ம் ஆண்டில் கட்டப்பட்ட முகைதீன் ஆண்டவர்கள் தர்ஹா,  திருநெல்வேலி முருகன் குறிச்சியில் உள்ள பழமைவாய்ந்த சர்ச், உவரியில் உள்ள கப்பல்மாதா சர்ச் போன்ற வையும் பார்க்கத்தகுந்த ஆன்மீக தலங்களாக விளங்குகின்றன. 

1 comment:

  1. காயல்பட்டினம் இருப்பது தெரியவில்லையா

    ReplyDelete